சிறப்பு துணைத்தேர்வு
நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகைபுரியாதவர்களுக்காக சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 25-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலும்.
தனியார் பிரவுசிங் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க இயலாது.
நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வுமையங்களுக்கு நேரில் சென்று நாளை (புதன்கிழமை) முதல் ஜூன் 2-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாட்கள் குறித்தான விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
கால அட்டவணை
இதற்கிடையே இந்த தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஜூன் 25-ந் தேதி - தமிழ் முதல் தாள்.
26-ந் தேதி - தமிழ் 2-வது தாள்.
27-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்.
28-ந் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்.
29-ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி, புவியியல்.
30-ந் தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயடெடிக்ஸ், வணிகவியல்.
ஜூலை 2-ந் தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மனைஅறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியியல், அரசியல் அறிவியல்.
3-ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.
4-ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம்.
This comment has been removed by the author.
ReplyDelete🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ReplyDelete2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....
நாள்: 25/06/2018
இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.
இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
*துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*
இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
இப்போது தெரியபடுத்துகிறோம்.
இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்.
2013 ஜ உயிர்பித்ததும் நாங்கள்தான்...
17 தலைவர்களிடம் அறிக்கையை பெற்றதும் நாங்கள்தான்.
எட்டு திக்கும் தெரிக்கவிட்டதும் நாங்கள்தான்.
மறவாதீர்கள் இது எங்களது இறுதி முயற்சி...
உறுதியாய் பணி பெறுவோம்....
கரம்கொடுங்கள், களம் வாருங்கள்..
💥💥💥💥💥💥💥💥💥💥
இவண்
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு
இளங்கோவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
8778229465
வடிவேல்சுந்தர்
மாநில தலைவர்
8012776142
சிவக்குமார்
மாநில செயலாளர்
( ஊடகபிரிவு)
9626580103
உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥