Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
flasher
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து முதுநிலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது. இக்கழகத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் ஆ.ராமு, மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஏற்பட்ட பிழைகளை திருத்தம் செய்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற பணிகளுக்காக பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்களை முழு தேர்ச்சியடைய வைப்பதற்காக பல்வேறு பயிற்சியளிப்பதிலும், சிறப்பு வகுப்பு எடுப்பதிலும், பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார் செய்வதிலும் ஆசிரியர்கள் முழுமையாக மும்முரமாக இம் மாதம் செயல்படுவர். இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு சரிபார்ப்பு, ஆதார் எண் இணைப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் பொதுத் தேர்வு எழுதும் செய்முறைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நலனில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுத் தேர்வு, செய்முறைத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து முதுநிலை ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 2008-ஆம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 3 ஆண்டுகளாக பொதுத் தேர்வில் 100 சத தேர்ச்சி பள்ளியாக திகழ்கிறது. இப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் இல்லாததால் அங்கு பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் கடந்த 6 ஆண்டுகளாக தேவனாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மிதிவண்டிகளில் சென்று பொதுத் தேர்வு செய்முறை தேர்வுகளை செய்து வருகின்றனர். மாணவர்களின் சிரமத்தை தவிர்க்க நிகழ் கல்வி ஆண்டில் அப் பள்ளியிலே பொதுத்தேர்வு, செய்முறைத் தேர்வுகளை செய்ய வழிவகை செய்ய வேண்டும். இதற்காக, பள்ளி வளாகத்தில் நவீன அறிவியல் ஆய்வகங்களுடன் கூடிய கட்டடங்களை கட்டித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு, 'அ, ஆ' போன்ற தமிழ் எழுத்துக்களே தெரியாதது ஆசிரியர்கள்
மற்றும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், கல்வித்துறை
அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைவருக்கும்
கல்வி கிடைக்கும் வகையில், மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம்,
2009ல் கொண்டு வரப்பட்டது.
இதன்கீழ், ஐந்து வயது முதல், 14 வரையிலான மாணவ,
மாணவியருக்கு கட்டாய இலவச கல்வி அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளிலும், 25
சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தவறாக
பயன்படுத்துவதால், கல்வியின் தரம் குறைந்து விட்டதாக, மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
அதனால், சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு
வரவும், 'ஆல் பாஸ்' என்ற முழுமையான தேர்ச்சி முறையை ரத்து செய்யவும்,
மாநிலங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகள் சிலவற்றில், கல்வித்துறை அதிகாரிகள் கற்றல்,
கற்பித்தல் ஆய்வில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சில ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு
பள்ளிகளில், 10ம் வகுப்பில், 100 சதவீத தேர்ச்சி காட்ட வேண்டும் என,
அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் கட்டாயப்படுத்துகின்றனர். குறைந்தது, 85
சதவீத தேர்ச்சியாவது இல்லாவிட்டால், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மற்றும்
பணி மாறுதல் இருக்கும் என, அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அதேநேரத்தில்,
அனைத்து மாணவர்களையும், 9ம் வகுப்பு வரை, 'ஆல்பாஸ்' செய்கின்றனர். அதனால்,
10ம் வகுப்பு ஆசிரியர்கள் மாட்டிக் கொள்கிறோம். பல மாணவர்களுக்கு தமிழில்
எழுத்துக் கூட்டி படிக்கவே தெரியவில்லை. வேறு வழியில்லாமல், 9ம் வகுப்பு
மற்றும் 10ம் வகுப்பில், மாணவர்களுக்கு உயிரெழுத்துகளை
சொல்லித்தர வேண்டியுள்ளது. சிறப்பு வகுப்பு
நடத்தினால் அவர்கள் வருவதில்லை.இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால்,
'மாணவர்களை சுதந்திரமாக விடுங்கள், பொதுத் தேர்வில் அவர்கள், 'எப்படியாவது'
தேர்ச்சி பெறுவர்' என்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம்
கேட்டபோது,'மாணவர்களை, 8ம் வகுப்பு வரை, 'பெயில்' செய்வதில்லை. பின் தங்கிய
மாணவர்களை தேர்ச்சி தராமல் நிறுத்தி வைத்தால், கட்டாய கல்வி சட்டப்படி
எங்களுக்கு பிரச்னையாகி விடுகிறது. எனவே, மாணவர்களும், பெற்றோரும் தான்,
இந்த பிரச்னையை தீர்த்து கொள்ள வேண்டும்' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com