பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும்; 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்பித்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து தங்கம் மற்றும் உதவித்தொகை வழங்குவார்கள்.2011 - --12ம் நிதியாண்டில், 1 லட்சத்து, 19 ஆயிரம் பேருக்கு, தங்கம் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. 2012 - 13ல், 1 லட்சத்து, 48 ஆயிரம்; 2013 - 14ல், 1 லட்சத்து, 37 ஆயிரம்; 2014 - 15ல், 1 லட்சத்து, 42 ஆயிரம் என, இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
ஏழைப் பெண்கள், திருமணத்தின் போது கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத் தான், அரசுஇந்தத் திட்டத்தைத் துவங்கியது. திட்டத்தின் நோக்கம் நிறைவேறுவது ஒருபக்கம் இருந்தால், எதிர்பாராத புதுப்பலன் ஒன்றும் இந்தத் திட்டத்தால் கிடைத்துள்ளது.இந்த திட்டத்தின் பலன் பெறுவதற்காக, கிராமங்களில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல், 10ம் வகுப்பு முடிப்பதற்கு முன், பள்ளியை விட்டு பாதியில் நிறுத்துவதும் குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கிராமப்புற பள்ளிகளில் பெண் குழந்தைசேர்க்கை, 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com