இதன்படி, 20 அம்சங்களில் மாற்றம் வரவுள்ளது:l கல்வித்தரத்தை உயர்த்துதல்; கல்வி நிறுவனங்களின் தர மதிப்பீட்டு முறையில் மாற்றம் கொண்டு வருதல்; மத்திய பல்கலைகளை அதிகரித்தல்; மாநில பல்கலைகளின் தரத்தை மேம்படுத்துதல். l உயர்கல்வியில், மாணவர்களின் திறன் வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம்; நாடு முழுவதும் திறந்தவெளி மற்றும் ஆன்லைன் படிப்புக்கு முக்கியத்துவம் அளித்தல்; தொழில்நுட்ப வசதிகளை மேம் படுத்துதல்; மாநில அளவில், மண்டல அளவில் பாகுபாடுகள் இல்லாத, ஒரே பாடத்திட்டம்; மிகச்சிறந்த ஆசிரியர்களை உருவாக்குதல்.
இத்தனை அம்சங்கள், புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்று உள்ளன.உத்தரவு இந்த கல்விக் கொள்கையின் விரிவான தகவல்கள், மத்திய மனிதவள மேம்பாடுஅமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்த கொள்கை குறித்து, அனைத்துக் கல்லுாரிகள், பல்கலைகள் சார்பில், தங்கள் கருத்துக்களை, ugc.nep@gmail.com என்ற முகவரிக்கு, ஜூலை 24ம் தேதிக்குள், இ-மெயிலில் அனுப்ப வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் படிப்புக்கு பல்கலைகளில் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனவே, ஆன்லைன் மற்றும் திறந்தவெளி தபால் வழிக் கல்வியை அதிகரிக்க வேண்டும்.
1 பல்கலை விதிகளில் மாற்றம் வேண்டுமா?
2 துணைவேந்தர் நியமனத் தில் தேடல் குழு முடிவு தேவையா?
3 கல்லுாரிகளின் அதிக செலவுக்கு, கல்லுாரி முதல்வர்மீது பொறுப்பு கொண்டு வரலாமா?
4 ஒழுங்காக பாடம் நடத்தாத ஆசிரியரை, என்ன செய்வது; பணியிட மாற்றம் செய்யலாமா; கவுன்சிலிங் தரலாமா அல்லது நீக்கி விடலாமா; நீக்க முடி வெடுத்தால், அதற்கு உங்கள் ஆதரவு உண்டா?
5 ஆசிரியர்களின் பயிற்சிக் காலத்தை ஐந்து ஆண்டு களாக அதிகரிக்கலாமா? ஏழை மாணவர்களுக்கு தனி கட்டண முறை புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, மத்திய அரசு சில கேள்விகளை கேட்டுள்ளது.
அதில் ஒன்று: l மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை ஒழுங்கு படுத்த என்ன செய்யலாம்? இதற்கான பதில்களில் ஏதேனும் ஒன்றை 'டிக்' செய்யவேண்டும்:
1 பல்கலை இணைப்பு முறையை மாற்றலாம்.
2 வெளிப்படையான நிர்வாகம் கொண்டு வந்து, கல்வி நிறுவனங்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.
3 வருவாய் அதிகம் உள்ள, தகுதியுடைய மாணவர்களுக்கு உரிய கட்டணம்; ஏழை மாணவர்களுக்கு, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கலாம்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com