ஐடிஆர்-2ஏ எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட படிவம், வர்த்தகம், தொழில் மூலம் வருமானம் இல்லாத, வெளிநாட்டில் சொத்து இல்லாத தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினர் தாக்கல் செய்யக்கூடியது ஆகும்.
அதில், வரி செலுத்துவோரிடம் பாஸ்போர்ட் இருந்தால், அதன் எண் மட்டும் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன், முந்தைய ஆண்டின் எந்த காலகட்டத்திலும் அவர் வைத்திருந்த சேமிப்பு மற்றும் நடப்பு வங்கிக்கணக்குகளின் மொத்த எண்ணிக்கையையும் தெரிவிக்க வேண்டும். செயல்பாட்டில் இல்லாத வங்கிக்கணக்கு விவரத்தை தெரிவிக்க வேண்டியது இல்லை.
வங்கிக்கிளையின் ஐ.எப்.எஸ்.சி. கோட் நிரப்ப இடம் விடப்பட்டுள்ளது. ‘ரீபண்ட்’ எனப்படும் திரும்பப் பெறும் தொகையை எந்த வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்வது என்பதையும் வரி செலுத்துவோர் குறிப்பிட வேண்டும். ‘ஆதார்’ எண் மற்றும் இ-மெயில் முகவரியும் கேட்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்வதற்காக, அவை கேட்கப்பட்டுள்ளன.
வர்த்தகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் பெறும் தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டு குடும்பத்தினருக்காக ஐடிஆர்-2 என்ற படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெளிநாட்டில் சொத்து இருந்தாலோ அல்லது வெளிநாட்டில் இருந்து வருமானம் வந்தாலோ அதுபற்றி குறிப்பிட வேண்டும்.
ஆனால், இந்திய குடிமகனாக இல்லாமல், தொழில், வேலை மற்றும் படிப்பு நிமித்தமாக இந்தியாவில் தங்கி இருப்பவர்கள், இந்தியாவில் தங்கி இருக்காத முந்தைய ஆண்டுகளில் வெளிநாட்டில் சொத்து வாங்கி இருந்தால், அதுபற்றி தெரிவிப்பது கட்டாயம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com