Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)

E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)

Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs


தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசு வேலை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தனியார் நர்சிங்
கல்லூரிகளில் படித்தவர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார
நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர் என்ற, தமிழக அரசின் உத்தரவு சரியானதே
என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தனியார் நர்சிங்
கல்லூரிகளில் படித்தவர்களை விட, அரசு நர்சிங் கல்லூரிகளில்
படித்தவர்களுக்கு, பணி நியமனத்தின்போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற
கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
சம அளவில்
கடந்த 2012ல், தமிழக
அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதில், தனியார் நர்சிங் கல்லூரிகளில்
படித்தவர்களும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்
பணி அமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம், அரசு நர்சிங்
கல்லூரிகளில் படித்த மாணவியரும், தனியார் நர்சிங் கல்லூரிகளில் படித்த
மாணவியரும், சம அளவில், அரசுப் பணி நியமனம் பெற வழிவகை செய்யப்பட்டது.
தமிழக அரசின் இந்த
உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு நர்சிங் கல்லூரி
மாணவியர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனாலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில்
அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார
நிலையங்களுக்கு, செவிலியர்களை நியமனம் செய்யும்போது, அரசு நர்சிங்
கல்லூரிகளில் படித்த மாணவியருக்கு மட்டுமே, முன்னுரிமை வழங்கினால், அது,
மற்ற துறைகளின் நியமனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
குழப்பம் ஏற்படும்
நர்சிங் மாணவியர்
கேட்பதுபோல, அரசு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்கள், தங்களுக்கு
மட்டுமே அரசு மருத்துவமனைகளில் வேலை தர வேண்டும் என்றும், அரசு சட்டக்
கல்லூரியில் படித்தவர்கள், தாங்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும் என்றும்
கேட்க ஆரம்பித்தால், குழப்பம்தான் ஏற்படும். அரசு கல்லூரிகளில்
படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தர ஆரம்பித்தால், தனியார்
கல்லூரிகளில் படித்தவர்கள் எல்லாம், வேலைவாய்ப்புக்கு எங்கே போவது என்ற
நிலையும் உருவாகும்.
எனவே, அரசு
மருத்துவமனைகளுக்கான செவிலியர் பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங்
கல்லூரிகளின் மாணவியருக்கே, முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை
ஏற்க முடியாது. அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகள் என, இரண்டையும்
சமமாகவே கருத முடியும். அரசு பணி நியமனங்களின்போது, இரு தரப்பினருக்கும்,
சமமான வாய்ப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர்
வழக்கு
விசாரணையின்போது, அரசு நர்சிங் கல்லூரி மாணவியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்
முன்வைத்த வாதம்: தனியார் கல்லூரிகளில், எளிதாக இடம் கிடைத்து விடுகிறது.
ஆனால், அரசு நர்சிங் கல்லூரிகளில், விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம்பெற்று,
மிகுந்த சிரமப்பட்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், அரசு நர்சிங்
கல்லூரிகளில் படிப்பவர்களே, அரசு மருத்துவமனைகளுக்கு அதிகம் சென்று
பணிபுரிகின்றனர்.
அதனால், அதிக அளவில்
பயிற்சி பெற்று, கூடுதல் தகுதிகளுடன் இருக்கின்றனர். நர்சிங்
பயிற்சியின்போதே, அரசுக்காக வேலை செய்து, அரசோடு சேர்ந்து
செயல்படுகின்றனர். எனவே, அரசு பணி நியமனங்களின்போது, அரசு நர்சிங் கல்லூரி
மாணவியருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com