திண்டுக்கல்லில் ஐந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கல்வித்துறை செயலர் பேசியதாவது: அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 90 சதவீதமாக உள்ள தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர், 3வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 16 க்கும்; 17 ல் இருந்த திண்டுக்கல் 19 க்கும்; 9ல் இருந்த தேனி 15வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன.
தினமலரில் மற்றொரு பக்கத்தில் வந்த செய்தி...
''தமிழகத்தில் இந்த ஆண்டில், 12,588 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, பள்ளிக்கல்வித் துறைச் செயலர் சபிதா தெரிவித்தார். திண்டுக்கல்லில், கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில், கல்வித் துறைக்கு, 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில், தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது; இதை சரி செய்ய வேண்டும்.
நான்கு ஆண்டுகளில், காலியாக இருந்த, 76,684 பணியிடங்களில், 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு, 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர்.
கணினி ஆசிரியர்களின் பணிநியமனம் குறித்து பள்ளிக்க்கல்வி முதனமைச் செயலாளர் மற்றும் அமைச்சர் வாய்திறக்காமல் இருப்பது கணினியில் பி.எஸ்.சி., பி..எட்., முடித்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ReplyDeleteமக்கள் நலப் பணியாளர் வழக்கில் நீதியரசர் பால்வசந்தகுமார் நேற்று வழங்கிய தீர்ப்பில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு அக்டோபர் மாதத்திற்குள் பல துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவர்கள் முடித்த கல்வித்தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். அக்கோபர் மாதத்திற்குள் பணி வழங்கவில்லை எனில் மாதந்தோரும் ஊதியம் கொடுத்திட வேண்டும். அவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்த கடைசி மாதம் என்ன ஊதியம் வழங்கப்பட்டதோ அதே ஊதியம் வழங்கப்பட வேண்டும். என்று உத்தரவிட்டுள்ளார்.
ReplyDeleteஇதே நீதியரசர் 7 மாதத்திற்கு முன்பு ஒரு தீர்ப்பினை வழங்கினார். அதில் கணினி ஆசிரியர் வழக்கு.
அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள் சார்பாக பேசிய வழங்கறிஞர்கள் 13 பேர் அதற்கு மேலும் இருக்கும். வாதங்களை நன்றாக உற்று கவனித்தார். பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
652 கணினி ஆசிரியர்களும் நம்பிக்கைய்யுடன் இருந்தனர். ஒன்றரை மாதம் கழித்து தீர்ப்பு வருகிறது. தீர்ப்பில் உங்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று ஒரே வரியில் கூறிவிட்டார்.
இந்த 652 கணினி ஆசிரியர்களும் 8 ஆண்டுகள் தற்காலிகமாகவும், 5 ஆண்டுகள் நிரந்தர ஆசிரியர்களாகவும் பணியாற்றி பின் வெளியேற்றப்பட்டனர். பணிநீக்கம் செய்து ஒன்றரை ஆண்டுகள் முடிவுறும் நிலையில் இருக்கின்றனர்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஒரு நியாயம்! பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நியாயமா? நீதியரசர் பால்வசந்தக்குமார் அவர்கள் கூறியிருக்கின்றார்.
நீதி என்பது ஒரேமாதிரியாக இருக்க வேண்டும். நீதிமன்றமே இவ்வாறு இருக்கும் போது வேறு யாரை குறைக் கூறுவது.
வேதனையுடன்
பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள்.