நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியை சேர்ந்த பவுசிநேசல் பேகம் (38), ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூ கத்தை சேர்ந்த நான், பி.லிட் (தமிழ்), பி.எட்., படித்துள்ளேன். மேலும் தமிழ் பண்டிட் படிப்பும் முடித்துள்ளேன். கடந்த 18.8.2013 அன்று நடந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில், 150க்கு 94 மதிப்பெண் பெற்றேன். இதனையடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தனர். தகுதித்தேர்வில் எடுத்த மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் ஆகியவற்றை கணக்கிட்டு, தகுதியானவர்களின் தற்காலிக பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.நான் 100க்கு 60.86 மதிப்பெண் எடுத்ததாகவும், பிற்படுத்தப்பட்ட முஸ்லி மை பொறுத்தமட்டில் 61.44 கட்&ஆப் நிர்ணயித்ததாக கூறி என்னை தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது. பிளஸ் 2, பி.லிட்., பி.எட்., ஆகியவற்றில் நான் பெற்ற மதிப்பெண்வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே நான் தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் கணக்கில் எடுத்து, பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் சேவியர் ரஜினி ஆஜரானார். மனு குறித்து பள்ளி கல்வித்துறை செய லாளர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத் தும் வழக்கின் இறுதி தீர்ப் பை பொறுத்தே அமையும் என உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com