110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: றீ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் திருவள்ளூர், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, சேலம், வேலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
மீதமுள்ள 21 மாவட்டங்களில் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அமைக்கப்படும்.
இதனால், அரசுக்கு ஒரு இல்லத்திற்கு, ஆண்டுக்கு, 9 லட்சத்து 66 ஆயிரத்து 800 ரூபாய் என்ற வீதம் 11 இல்லங்களுக்கு 1 கோடியே 6 லட்சத்து 34 ஆயிரத்து 800 ரூபாய் செலவினம் ஏற்படும். றீ மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் சிறப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்போது மதிய உணவு வழங்கப்படுவதில்லை. எனவே சத்துணவு திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின், கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், உத்தேசமாக 1733 மாணவர்கள் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 38 லட்சத்து 99,250 ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com