இதனால், விடுமுறை காலம் எங்களுக்கு கசப்பான அனுபவம் என, புலம்புகின்றனர். கடந்த 2012, மார்ச் மாதம், மாவட்டத்தில் 700 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு வாரத்தில், மூன்று அரை நாட்கள் மட்டும் வேலை. அதற்கு மாதம் 5,000 ரூபாய் சம்பளம் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், கோடை விடுமுறை மற்றும் அரையாண்டு விடுமுறை நாட்களுக்கு சம்பளம் கிடையாது.
பணி நியமன உத்தரவில், இந்த நிபந்தனை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்று சம்பளம் வழங்கும் என, எதிர்பார்த்து உள்ளனர்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகையில், மே மாதம் சம்பளம் இல்லாததால், மிகவும் சிரமப்படுகிறோம். வழக்கமான ஆசிரியர்களுக்கு வழங்குவது போன்று எங்களுக்கும் மே மாதம் சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com