Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)
flasher
E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs
பாட வாரியாக தேர்ச்சி விவரப் பட்டியல்: டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர் எதிர்பார்ப்பு
'பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
தகுதியான ஆசிரியர்களை நியமிக்க
வேண்டும் என்ற நோக்கத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி
நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில், 150க்கு 90 மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெற்றவராக
அறிவிக்கப்பட்டனர்.
பின், தேர்ச்சி பெற 82 மதிப்பெண்ணாக குறைத்து தேர்ச்சி
நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, கடந்தாண்டு ஆக.,17 மற்றும் 18 ல் நடந்த,
டி.இ.டி., தேர்வுகளில் மட்டும் 72 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை
ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர்.
இதில், தாள் 2ல், தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு,
விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. ஆனால், காலிப் பணியிடங்கள்
16 ஆயிரம் மட்டுமே உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.
இதனால், டி.இ.டி.,யில்
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு என்பது சாத்தியமில்லை. ஆனால்,
அறிவித்துள்ள காலிப் பணியிடங்களில், தமிழ், ஆங்கிலம் என பாட வாரியான
காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் டி.இ.டி., தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி
பெற்றவர் எண்ணிக்கை, விவர பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட
வேண்டும். இந்த விவரம் தெரிந்தால் தான், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற
ஒருவருக்கு, எப்போது பணி நியமனம் கிடைக்கும், என அவர்களால் தெரிந்துகொள்ள
முடியும். இது தெரியாமல் தற்போது, டி.இ.டி. தேர்ச்சி பெற்றிருந்தும், அரசு
உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பல
லட்சம் ரூபாய் 'பேரம்' பேசப்படும் நிலை உள்ளது.
இப்பிரச்னைக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இடஒதுக்கீடு அடிப்படையிலான காலிப்
பணியிடங்கள் மற்றும் பாட வாரியான டி.இ.டி., தேர்ச்சி விவரப் பட்டியலை
வெளியிட வேண்டும், என்று தேர்ச்சி பெற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களின் பாட வாரியான தேர்ச்சி விவரம், அரசு
அறிவித்துள்ள காலிப் பணியிடங்களில், பாட வாரியான காலியிடங்களின் விவரத்தை
வெளியிட்டால் தான், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளிப்படை தன்மை தெரியும்,
என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
பாடவாரியான தேர்ச்சி விவரப்பட்டியல் என்பது ஆசிரியர் தகுதித்தேர்வில் மிகவும் இன்றியமையாத ஒன்று !
ReplyDeleteபொதுவாக பாடவாரியான பிரிவு என்பது மொழிப்பாடங்கள், அறிவியல் மற்றும் கணிதம், சமூக அறிவியல் என்பதாக அமையும். இதில் மொழிப்பாடங்களில், தமிழ், ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களில் வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் போன்ற உட்பிரிவுகளும் உண்டு !
தனியார்பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் இருந்தே அறிவியல் பாடங்களை, வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல் எனப்பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பிரிவிற்கும் அந்தந்த அறிவியல் பிரிவில் பட்டம் பெற்ற ஆசிரியர்களால் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஆனால், தற்போதைய அரசுப்பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு இது போன்ற தனித்தனி அறிவியல் பிரிவுகளுக்கான கற்பித்தல் முறைகளை அமுல்படுத்தினால் நலமாக அமையும். ஆசிரியர்களுக்கான பணியிடங்களும் அதிகரிக்கும். இதனால் தனியார் பள்ளிகளுக்குச் சமமான கல்வித்தரம் மிக்க பள்ளிகளாக அரசுப்பள்ளிகளும் மாறும்.
சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடம் பயின்ற ஒரு பட்டதாரி ஆசிரியரை அறிவியல் பாடம் கற்பிக்க உட்படுத்துவதும், அறிவியல் பாடம் பயின்ற ஒரு பட்டதாரி ஆசிரியரை , சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடங்கள் கற்பிக்க உட்படுத்துவதும் ஏற்புடையதல்ல.
சமூக அறிவியல் பயின்ற ஒரு பட்டதாரி ஆசிரியரின் மனநிலையும், அறிவியல் பயின்ற ஒரு பட்டதாரி ஆசிரியரின் மனநிலையும் பொதுவாக மாறுபட்டவை.
சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடங்கள் ' விரி சிந்தனையை ' அடிப்படையாகவும்,
கணிதம் மற்றும் அறிவியல் போன்றவை ' குவிசிந்தனையை ' அடிப்படையாகவும் கொண்டவை !
விரிசிந்தனை மனப்பான்மையுள்ள ஒரு சமூக அறிவியல் ஆசிரியர், குவிசிந்தனையை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் பாடத்தைக் கற்பிப்பதும்,
குவி சிந்தனை மனப்பான்மையுள்ள ஒரு அறிவியல் ஆசிரியர், விரிசிந்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடங்கள் கற்பிப்பதும் முற்றிலும் முரணானது. இதன் அடிப்படையில் தான் பாடவாரியான தேர்ச்சிப்பட்டியல் என்பது முன்வைக்கப்படுகிறது !
ஆசிரியர் தகுதித்தேர்விலும் கூட அறிவியல் கணிதம் என்றொரு பிரிவும் சமூக அறிவியல் என்றொரு பிரிவும் ' தேர்ந்தேடுப்புப் பாடங்களாகக் ' கொடுக்கப்பட்டிருந்தன. இதனடிப்படையிலும் தேர்ச்சிப்பட்டியல் தயாரிப்பது நலம்பயக்கும்.
மேலும், அரசுப்பள்ளி ஆசிரியர் பணியென்றால் மிகவும் ஜாலியாக இருக்கலாம் என்ற எண்ணம் பொதுமக்களிடம் வேரூன்றி இருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று ! உண்மையில் ' சேவை மனப்பான்மை ' அதிகம் தேவைப்படும் பணிதான் அரசுப்பணி !
அடுத்ததாக, பல தனியார் பள்ளிகள் ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் நிறைவற்ற ஊதியம், பணிச்சுமை, ஏதேச்சாதிகாரம் போன்றவைகளாலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் மனநிலை பாதிப்படைகிறது !
அத்தகைய தனியார்பள்ளிகளில் அரசு தலையிட்டு ஆசிரியர்களுக்கு போதிய ஊதியமும், நியாயமான பணி ஒதுக்கீடும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். காரணம்,
" ஒரு சமுதாயம் என்பது பள்ளியில் இருந்துதான் தொடங்குகிறது "
ஒரு தனியார்பள்ளியில் ஆசிரியருக்குக் கொடுக்கப்படும் மரியாதையும், நியாயமான அதிகாரமும் மாணவர்களின் விழும நிலைக்கு அடிப்படை ஆதாரமாக அமைகிறது.
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சியான 72,000 ஆசிரியர்களுக்கும் அரசுப்பணி என்பது சாத்தியமல்ல. 14,000 பேர் தேர்ச்சியடைந்தது போக மீதி சுமார் 60000 பேர் மீண்டும் தனியார் பள்ளிகளில் தான் தத்தம் பணிகளைத் தொடர வேண்டும். ஏற்கனவே அரசுப்பணி கிட்டாமல் மன அழுத்தத்தில் இருக்கும் அவர்கள் தனியார் பள்ளி நிர்வாகிகள் கொடுக்கும் அழுத்தத்தில் இன்னும் மனநிலை பாதிக்கப்பட்டு, அது மாணவர்களின் மீது பிரதிபலிக்கலாம்.
அரசும், சமூக ஆர்வலர்களும் இது குறித்துச் சிந்தித்தால் நலமாக அமையும்.