Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)

E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)

Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs


10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: தேர்வு அட்டவணை
நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில்
தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38
ஆயிரத்து 876 மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.
தமிழகம் புதுச்சேரியில் பத்தாம்
வகுப்பு தேர்வு நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. தேர்வு
காலை 9.15 மணிக்கு தொடங்கும். கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமிடம்
ஒதுக்கப்படுகிறது. விடைத்தாளின் முகப்பு படிவத்தில் மாணவர்களின் போட்டோ,
பதிவெண் விவரங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை சரிபார்க்க 5 நிமிடம்
ஒதுக்கப்படுகிறது.
அதனால் மாணவர்கள் 9.30 மணிக்கு விடை எழுதத்
தொடங்கி 12 மணிக்கு தேர்வை முடிக்க வேண்டும். கேள்வித்தாள் வெளியாகாமல்
இருக்க 20 கேள்வித்தாள் கொண்ட சீலிடப்பட்ட உறைகள் தேர்வு அறைகளுக்கே
எடுத்து வரப்பட்டு இரண்டு தேர்வர்களிடம் கையொப்பம் பெற்று உறைகள்
பிரிக்கப்பட்டு மாணவர்களிடம் கேள்வித்தாள் வழங்கப்படும். தேர்வு மையங்கள்
செயல்படும் பள்ளிகளில் அந்த பள்ளியை சேர்ந்த தாளாளர்கள், செயலாளர்கள்
உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை
பணியாளர்கள் வளாகத்திலேயே இருக்க கூடாது.
பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று நிறைவு பெறுகிறது.
இதையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நாளை தமிழ்
முதல் தாள் தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும்
தயார் நிலையில் உள்ளன. தலைமை தேர்வர்கள் மற்றும் பறக்கும் படையினர், தேர்வு
பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கல்வி
அலுவலர்கள் தலைமையில் நடந்தது. காலை 9.15 மணிக்கே தேர்வு தொடங்க உள்ளதால்
வினாத்தாள்களை பதற்றமின்றி தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக ரூட்
ஆபீசர்களுக்கு தேவையான ஆலோசனைகளை கல்வி அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.
பிளஸ்2 தேர்வுக்கு 38 பக்கங்களில் விடை எழுதும்
அளவிற்கான முதல் விடைத்தாள் வழங்கப்பட்டது. அதுபோல் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு 30 பக்க அளவில் முதல் கட்ட விடைத்தாள் வழங்கப்படும். இது போக
தேவைப்படும் மாணவர்களுக்கு கூடுதல் விடைத்தாள் வழங்கவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 11,552
பள்ளிகளில் இருந்து 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 பேர் எழுதுகின்றனர்.
இவர்களில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 462 பேர் மாணவர்கள், 5 லட்சத்து 8
ஆயிரத்து 414 பேர் மாணவியர். தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 3,179 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்களை தவிர 286 தேர்வு மையங்களில்
74 ஆயிரத்து 647 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுவார்கள். அவர்களில் 55
ஆயிரத்து 454 பேர் மாணவர்கள். 19 ஆயிரத்து 193 பேர் மாணவியர்.
டிஸ்லெக்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதவர்கள் மற்றும்
இதர உடல் ஊனமுற்றோருக்காக சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி மேற்கண்டோர்
சொல்வதை எழுதுவதற்காக ஒருவர் நியமிக்கப்படுவார். மொழிப்பாடத்தில் ஒன்று
தவிர்க்கப்படுகிறது. மேலும் தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம்
ஒதுக்கப்படுகிறது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஜெனரேட்டர் வசதி செய்து கொள்ளவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனை
செய்யவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு உறுப்பினர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். துண்டுத்தாள் வைத்திருத்தல், அதை பார்த்து எழுத
முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம்
முறைகேடாக நடந்து கொள்ளுதல், தேர்வுத் தாளை மாற்றிக் கொள்ளுதல், ஆள்
மாறாட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை
வழங்கப்படும். தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் பள்ளி
மாணவர்களில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 430 பேருக்கு தேர்வுக் கட்டணத்தில்
இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் திடீர் ஆய்வு:
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்வு
மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர்
தலைமையில் மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் அவர்கள்
இணைந்து செயல்படுவார்கள். அதில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், மாவட்ட
வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் இடம்
பெறுகின்றனர். அவர்கள் தேர்வு மையங்களை திடீரென பார்வையிடுவார்கள். இது
தவிர பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களை பார்வையிடுவார்கள்.
முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தேர்வு மையங்களை
பார்வையிட கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளனர். அந்த குழுவும் திடீர்
ஆய்வு செய்யும்.
சிறைக் கைதிகள்:
கடந்த சில ஆண்டுகளாக சிறைகளில் தேர்வு மையம்
அமைக்கப்பட்டு அங்கேயே தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது சென்னை புழல்
சிறையில் 45 கைதிகளும், திருச்சி சிறையில் 74 கைதிகளும் தேர்வு
எழுதுகின்றனர்.
சென்னையில் 207 தேர்வு மையம்:
பத்தாம் வகுப்பு தேர்வில் சென்னை மாவட்டத்தில்
588 பள்ளிகளில் இருந்து மொத்தம் 56 ஆயிரத்து 556 மாணவ மாணவியர்
எழுதுகின்றனர். அவர்களில் 27 ஆயிரத்து 943 பேர் மாணவர்கள். 28 ஆயிரத்து 613
பேர் மாணவியர். அவர்களுக்காக சென்னையில் 207 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 279 பள்ளிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 509
மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் 9 ஆயிரத்து 309 பேர்
மாணவர்கள். 9 ஆயிரத்து 200 பேர் மாணவியர். இவர்களுக்காக புதுச்சேரியில் 46
தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 26ம் தேதி தமிழ் முதல் தாள்
மார்ச் 27ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4ம் தேதி கணிதம்
ஏப்ரல் 7ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 9ம் தேதி சமூக அறிவியல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com